Posts

Showing posts from July, 2018

கரகாட்டம் ம(றை)றந்த கலை-2

"கலைகள் எல்லாம் ஒன்று சேர்ந்து கர்வத்துடன் காலில் சலங்கை கட்டி இருகைகள் கூப்பி மனிதன் தலையில் ஏறிநின்று ஆடுகிறேன் நான்...தமிழன் தலைநிமிர்ந்து கரகமாடிப் பாடுகி றேன்" என்று மக்கள் கண்களுக்கு விருந்தளிக்கும் கலை கரகாட்டக் கலையே...! கரகாட்டச்சிறப்புப் பயிற்சிகள்: கரகக்கலையானது மிகவும் தெய் வத்தன்மை வாய்ந்ததாக மதிக்கப்படுகிறது.இதைக்கற்கும் போது கற்பவரின் மனநிலையா னது ஒருநிலைப்படுத்தப்படுகின் றது. தலையில் சுமந்து ஆடும் கரகமானது இக்கலையைப் பயில்பவரின் உயிரைப் போன்று கருதப்படும்.கரகத்தைத் தலையில் ஆடுதல் ஒரு சிறப்பு அம்சமாகும்.கரகாட்டம் ஆடுபவர்களின் உடல்வா கானது நடுநிலைத்தன்மை வாய்ந்த தாகக் கருதப்படுகிறது.

கரகாட்டம் (றை)றந்த கலை

கரகாட்டக்கலை நம் தமிழ்நாட்டில் கிராமியக் கலைகளில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படும் கலை கரகாட்டம் ஆகும்.கலைகள் இல்லையென்றால் தமிழன் இல்லையென்று கூறும் அளவிற்கு கலைகளை நேசிக்கும் இனம் நம் தமிழினம். "நூலே கரகம் முக்கோல் மணையே ஆயுங்காலை அந்தணர்க்கு உரிய" (தொல்-1570) என தொல்காப்பியத்தில் அன்றே கரகக்கலையின் சிறப்புப் பற்றிக் கூறப்பட்டுள்ளது."ஆடை குறைந்த நாகரீகங்களின் ஆட்டம் நம் மண்ணில் புகுந்தாலும் அன்பை வெளிப்படுத்தும் நம் கரகாட்டத்திற்கு நிகராகுமா...! "கருவுற்ற கலைத் தாய் நாதஸ்வர தவிலின் ஒலிவழியே கரகாட்டம் என்ற குழந்தை பிறந்து சிரித்தது என் தமிழ் மண்ணில்...."