"கலைகள் எல்லாம் ஒன்று சேர்ந்து கர்வத்துடன் காலில் சலங்கை கட்டி இருகைகள் கூப்பி மனிதன் தலையில் ஏறிநின்று ஆடுகிறேன் நான்...தமிழன் தலைநிமிர்ந்து கரகமாடிப் பாடுகி றேன்" என்று மக்கள் கண்களுக்கு விருந்தளிக்கும் கலை கரகாட்டக் கலையே...! கரகாட்டச்சிறப்புப் பயிற்சிகள்: கரகக்கலையானது மிகவும் தெய் வத்தன்மை வாய்ந்ததாக மதிக்கப்படுகிறது.இதைக்கற்கும் போது கற்பவரின் மனநிலையா னது ஒருநிலைப்படுத்தப்படுகின் றது. தலையில் சுமந்து ஆடும் கரகமானது இக்கலையைப் பயில்பவரின் உயிரைப் போன்று கருதப்படும்.கரகத்தைத் தலையில் ஆடுதல் ஒரு சிறப்பு அம்சமாகும்.கரகாட்டம் ஆடுபவர்களின் உடல்வா கானது நடுநிலைத்தன்மை வாய்ந்த தாகக் கருதப்படுகிறது.
Comments
Post a Comment